உச்சநீதிமன்றத்தில் சிலைகளை அடித்து நொறுக்கிய மாணவர் அமைப்பினர்.. வங்கதேசத்தில் பெரும் பதற்றம்

x

வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள கலவரத்தை அடுத்து அந்நாட்டு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, மத்திய வங்கி ஆளுநர் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்து உள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர் அமைப்பினர் உள்ளிட்டோர் தலைநகர் டாக்காவில் உள்ள உச்சநீதிமன்றத்தை சுற்றி வளைத்து முற்றுகையிட்டனர். அங்கிருந்த சிலையை அடித்து நொறுக்கி போராட்டக்காரர்கள் முழக்கம் எழுப்பினர். இதையடுத்து அங்கிருந்து வெளியேறிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தாம் பதவி விலகியதாக அறிவித்தார். போராட்டத்தால் உச்சநீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்