வெடிக்கும் வங்கதேசம் பள்ளி, கல்லூரிகள் காலவரையின்றி மூடல்...எல்லையில் குவியும் இந்தியர்கள்

x

நாளுக்கு நாள் வெடிக்கும் வங்கதேசம் பள்ளி, கல்லூரிகள் காலவரையின்றி மூடல் எல்லையில் குவியும் பாதிக்கப்பட்ட இந்தியர்கள் வங்கதேச வன்முறையால் பாதிக்கப்பட்ட இந்தியர்கள் உள்பட 360 பேர் மேகாலயா மாநிலத்திற்கு வருகை தந்துள்ளனர்.

அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு சீர்திருத்தம் தொடர்பான மாணவர்கள் போராட்டத்தால் ஏற்பட்ட வன்முறை காரணமாக 105 பேர் உயிரிழந்துள்ளனர், ஆயிரத்து 500-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இந்த வன்முறையால் பாதிக்கப்பட்ட இந்தியர், நேபாளம், பூட்டானைச் சேர்ந்த 360க்கும் மேற்பட்டோர் மேகாலயாவுக்கு சென்றனர். டாவ்கி ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி வழியாக மேகாலயா சென்றதாக கூறப்படுகிறது. அவர்களில் 204 பேர் இந்தியர்கள், 158 பேர் நேபாளர்கள் மற்றும் ஒருவர் பூட்டானை சேர்ந்தவர் என அதிகாரிகள் கூறுகின்றனர். வன்முறையை கட்டுப்படுத்தும் வகையில், மொபைல் இணைய சேவையை தடை செய்ய அரசு உத்தரவிட்டது. வங்கதேசத்தில் பள்ளிகள், கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்