எகிப்து மீது எதிர்பாரா தாக்குதல்.. சரிந்த முக்கிய தளபதியின் தலை - கரண்ட் பாக்ஸில் கைவிட்டதா இஸ்ரேல்?

x

எகிப்தில் உள்ள 2 செங்கடல் நகரங்களை ஏவுகணைகள் தாக்கியதில் சிலர் காயம் அடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது... தபா மற்றும் நுவெய்பா நகரங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது... இத்தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை. அதே சமயம், செங்கடல் நகரங்களைத் தாக்கிய ஏவுகணைகள், இஸ்ரேல் - பாலஸ்தீன போருடன் தொடர்புடையவையாக இருக்கலாம் என எகிப்து ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சினாய் தீபகற்பத்தில் அமைந்துள்ள இவ்விரு நகரங்களும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்கள்... கடந்த வாரம் கூட எகிப்து எல்லையில் இருந்த காவலர்கள் பலர் தற்செயலாக இஸ்ரேல் டேங்கில் இருந்து வந்த வெடிகுண்டு துண்டுகளால் காயம் அடைந்தனர். இஸ்ரேல் இச்சம்பவத்திற்கு மன்னிப்பு கோரி இருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்