இலங்கை அதிபர் தேர்தல் - வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம் | 2024 Sri Lanka Elections

x

நாளை நடைபெற உள்ளா இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்கு பெட்டிகளையும், வாக்குச் சீட்டுகளையும் விநியோகிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

இலங்கையின் 9ஆவது அதிபர் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதில் ஒரு கோடியே 71 இலட்சத்து 41 ஆயிரம் பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இதற்காக 13 ஆயிரத்து 421 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குகள் எண்ணும் பணிகளுக்காக ஆயிரத்து 713 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு சாவடிகளை பாதுகாக்கும் பணியில் 63 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினரும், 3 ஆயிரத்திற்கு அதிகமான இராணுவ வீரர்களும், 2 ஆயிரத்து 500க்கும் அதிகமான காவல்துறை காமான்டோ படையினரும் ஈடுபட்டுள்ளனர். வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும் பணிகள், இன்று காலை முதல் நடந்து வருவதாக தேர்தல் ஆணையர் சிவசுப்ரமணியம் அச்சுதன் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்