"எங்களுக்காக குரல் கொடுங்கள்" - இந்தியாவிற்கு உக்ரைன் அழைப்பு

ரஷ்யாவுடனான நட்பை முறிக்கும் காலம் இந்தியாவிற்கு வந்துவிட்டது என்றும் அமெரிக்கா இந்தியாவிற்கு எல்லா விதத்திலும் துணை நிற்கும் என்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
x
ரஷ்யாவுடனான நட்பை முறிக்கும் காலம் இந்தியாவிற்கு வந்துவிட்டது என்றும் அமெரிக்கா இந்தியாவிற்கு எல்லா விதத்திலும் துணை நிற்கும் என்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். 

இது தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ள வீடியோவில், கடந்த முறை ரஷ்யாவிற்கு எதிராக ஐநா சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது, பெரும்பாலான ஆசிய நாடுகள் தீர்மானத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்ததை சுட்டிக்காட்டினார். இதனால் தங்களுக்கு ஆதரவாகவும், ரஷ்யாவிற்கு எதிராகவும் குரல் கொடுக்க ஆசிய நாடுகள் முன்வர வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 
மேலும், ஆசிய நாடுகள் உக்ரைன் மீதான தங்களின் அணுகுமுறையை மாற்றி கொள்ள வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்