பிரதமர் மோடிக்கு பாகிஸ்தானின் புதிய பிரதமர் கொடுத்த 'முதல்' உறுதி

இந்தியாவுடன் அமைதியான நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை விரும்புவதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீப் கூறியுள்ளார்.
x
பிரதமர் மோடிக்கு பாகிஸ்தானின் புதிய பிரதமர் கொடுத்த 'முதல்' உறுதி

இந்தியாவுடன் அமைதியான நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை விரும்புவதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீப் கூறியுள்ளார். பாகிஸ்தானின் 23வது பிரதமராக ஷெபாஸ் ஷரீப் பொறுப்பேற்றதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதி இருந்தார். அதற்கு டிவிட்டரில் நன்றி தெரிவித்த ஷெபாஸ் ஷரீப், இந்தியாவுடன் அமைதி மற்றும் ஒத்துழைப்பை பாகிஸ்தான் விரும்புவதாகவும், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு அமைதி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுவது இன்றியமையாதது என குறிப்பிட்டுள்ளார். மேலும் அமைதியை காக்கவும், சமூக பொருளாதார வளர்ச்சிக்கு இரு நாடுகளும் இணைந்து செயல்படுவோம் என்றும் பாகிஸ்தான் பிரதமர் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்