ரஷ்யாவிலிருந்தும் தாயகம் திரும்பும் மாணவர்கள் - காரணம் என்ன?

உக்ரையில் இருந்து மட்டுமல்லாமல், ரஷ்யாவிலிருந்தும் இந்திய மாணவர்கள் சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். இது குறித்த ஒரு தொகுப்பை காணலாம்...
x
ரஷ்ய படையெடுப்புக்கு மத்தியில் உக்ரைனில் தவித்த இந்திய மாணவர்களை மத்திய அரசு மீட்டு வருகிறது. மறுபுறம் போரால் உலகம் முழுவதும் உணவுப்பொருட்கள் விலையில் தாக்கம் ஏற்பட தொடங்கியிருக்கிறது. மேற்கத்திய நாடுகள் விதித்த பொருளாதார தடையால், ரஷ்யாவில் இந்த தாக்கம் எதிரொலிக்கிறது. 

இதற்கு மத்தியில் ரஷ்யாவில் உள்ள இந்திய மாணவர்களின் நிலை என்ன...? என்ற கேள்வியும் எழுந்தது. தற்போது அங்கிருந்தும் இந்தியா திரும்ப தொடங்கியிருக்கும் மாணவர்கள், பெற்றோர் கேட்பதால் இந்தியா திரும்புவதாகவும், ரஷ்ய பகுதி முற்றிலும் பாதுகாப்பானது எனக் கூறுகிறார்கள்.

Next Story

மேலும் செய்திகள்