"சிறுத்தைகளுடன் என்னை மீட்க வேண்டும்" - உக்ரைனில் இருக்கும் இந்திய மருத்துவர் கோரிக்கை

ஆந்திர பிரதேச மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்தவர் ஜாகுவார் குமார். மருத்துவம் படிப்பதற்காக உக்ரைன் சென்றவர் படிப்பு முடிந்ததும் அங்கே மருத்துவராக பணியாற்றி வருகிறார்.
x
ஆந்திர பிரதேச மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்தவர் ஜாகுவார் குமார். மருத்துவம் படிப்பதற்காக உக்ரைன் சென்றவர் படிப்பு முடிந்ததும் அங்கே மருத்துவராக பணியாற்றி வருகிறார். டான்பாஸ் பகுதியில் இருக்கும் அவர், அங்கு கருஞ்சிறுத்தை உள்பட 2 சிறுத்தைகளை செல்லப்பிராணிகளாக வளர்த்து வருகிறார். தற்போது போர் தீவிரமாகியுள்ளதால் உக்ரைனிலிருந்து இந்தியர்களை மத்திய அரசு மீட்டு வருகிறது. ஆனால் தான் செல்லமாக வளர்த்துவரும் சிறுத்தைகளை விட்டுவிட்டு நாடு திரும்பமாட்டேன் என ஜாகுவார் குமார் கூறிவருகிறார். டான்பாஸ் பகுதி ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ளதாக கூறும் ஜாகுவார் குமார், சிறுத்தைகளை அழைத்து வருவது தொடர்பான தனது கோரிக்கைக்கு இந்திய தூதரகம் சரியான பதிலை அளிக்கவில்லை என்றும் குழந்தைகள் போல் வளர்த்துவிட்ட சிறுத்தைகளுடன் பாதுகாப்பாக இருக்க தேவையான முயற்சிகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்