ரஷ்ய குண்டுவீச்சில் காயமடைந்த இந்திய இளைஞர்

ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் உக்ரைனின் கிவ் நகரில், இந்தியரான ஹர்ஜோத் சிங் காயமடைந்தார்.
x
ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் உக்ரைனின் கிவ் நகரில், இந்தியரான ஹர்ஜோத் சிங் காயமடைந்தார். பலத்த குண்டடியால், உடலின் பல்வேறு இடங்களில் காயமடைந்த அவர், எல்லை வழியாக, போலந்து நாட்டுக்கு மீட்கப்பட்டார். பாஸ்போர்ட் போன்ற ஆவணங்களை இழந்த ஹர்ஜோத் சிங், இந்திய தரப்பால் அணுகப்பட்டுள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள மத்திய அமைச்சர் வி.கே.சிங், இன்று ஹர்ஜோத் சிங் இந்தியா அழைத்துவரப்படுவார் என கூறியுள்ளார். இதனிடையே, ரெட்கிராஸ் ஆம்புலன்ஸ் மூலம், போலந்து நாட்டுக்கு ஹர்ஜோத் சிங் மீட்கப்பட்டதாக சர்வதேச அமைப்பின் இந்தியாவுக்கான தலைவர் புனீத் சிங் சந்தோக் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்