பாலஸ்தீனத்தில் இந்திய தூதர் திடீர் மரணம்

பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தில் இந்திய தூதர் சடலமாக மீட்கப்பட்டதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
x
பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தில் இந்திய தூதர் சடலமாக மீட்கப்பட்டதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியத் தூதரகம் அமைந்துள்ள ரமல்லாவில் உள்ள அலுவலகத்தில் இந்திய தூதர் முகுல் ஆர்யா உயிரிழந்ததாக பாலஸ்தீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் தெரிவித்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்திய தூதர் முகுல் ஆர்யாவின் மறைவு அதிர்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார். மேலும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்