இந்தியர்களை மீட்க ரெட் கிராஸ் அமைப்புகளை நாடும் இந்திய தூதரகம் | ThanthiTv
இந்தியர்களை மீட்க ரெட் கிராஸ் அமைப்புகளை நாடும் இந்திய தூதரகம் | ThanthiTv
உக்ரைனின் சுமி நகரில் இருக்கும் இந்தியர்களை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. உறைவெப்பநிலையிலும், உணவு, தண்ணீர் இன்றி உயிருக்கு போராடுவதாக சுமி நகரில் இருக்கும் இந்திய மாணவர்கள் வீடியோ வெளியிட்டனர். இந்த நிலையில் அங்குள்ளவர்கள் மீட்பது தொடர்பாக ஆலோசித்து வருவதாகவும், மாணவர்களை வெளியேற்ற ரெட் கிராஸ் உள்ளிட்ட அமைப்புகளை அடையாளம் கண்டு வருவதாகவும் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும், அவசர கட்டுப்பாட்டு அறை எந்நேரமும் செயல்பாட்டில் இருக்கும் என்ற இந்திய தூதரகவும், அனைத்து இந்தியர்களும் பாதுகாப்பாக மீட்கப்படுவார்கள் என கூறியுள்ளது.
Next Story