உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்கும் பணி தீவிரம் - "அடுத்த 3 நாட்களுக்கு 26 விமானங்கள் இயக்கம்"

அடுத்த 3 நாட்களுக்கு உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்க 26 விமானங்கள் இயக்கப்பட உள்ளன.
x
அடுத்த 3 நாட்களுக்கு உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்க 26 விமானங்கள் இயக்கப்பட உள்ளன. 

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க விமானப்படைக்கு சொந்தமான சி 17 போர் விமானம் ருமேனியா செல்கிறது. அடுத்த 3 நாட்களுக்கு உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்பதற்கு 26 விமானங்கள் இயக்கப்பட உள்ளதாகவும், இதுவரை 12 ஆயிரம் இந்தியர்கள் மீட்கப்பட்டதாகவும் விட்டார்கள் மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் கூறியுள்ளது. மீதமுள்ள 40 சதவீத பேரில் பாதி பேர் கார்கிவ், சுமி பகுதியில் சண்டை நடக்கும் பகுதிகளில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. 
இந்தியர்களை மீட்கும் பணிகள் தொடர்பாக போலந்து அதிபரிடம் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசியதாகவும் உக்ரைனில் இருந்து தப்பி சுமார் 1700 இந்தியர்கள் போலந்து நாட்டில் தற்பொழுது உள்ளதாக மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் கூறியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்