உக்ரைனில் இந்திய மாணவர் உயிரிழப்பு - பிரதமர் மோடி தலைமையில் அவசர ஆலோசனை

உக்ரைன் விவகாரம் தொடர்பாக, பிரதமர் மோடி தலைமையில் உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
x
உக்ரைன் விவகாரம் தொடர்பாக, பிரதமர் மோடி தலைமையில் உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

உக்ரைனில், கர்நாடக மருத்துவ மாணவர் நவீன், ரஷ்ய ராணுவ தாக்குதலில் உயிரிழந்தார். இந்நிலையில் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் 
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் வெளியுறவு துறை செயலாளர், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியிடம் இந்தியர்களை மீட்கும் முயற்சி குறித்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது. கடந்த 48 மணி நேரத்தில் நடத்தப்படும் நான்காவது உயர்மட்டக்குழு கூட்டம் இதுவாகும். 

Next Story

மேலும் செய்திகள்