மாணவர்கள் விவகாரம் - பிரதமர் மோடிக்கு பினராயி விஜயன் கடிதம்

பிரதமர் மோடிக்கு பினராயி விஜயன் கடிதம்
x
உக்ரைனில் சிக்கியுள்ள கேரள மாணவர்களை தாயகம் அழைத்து வர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இரண்டாவது முறையாக கடிதம் எழுதியுள்ளார். உக்ரைனில் உள்ள கீவ், கார்கிவ் மற்றும் சுமி பகுதிகளில் இந்த மாணவர்கள் பதுங்கு குழிகளில் உணவு, தண்ணீர் இல்லாமல் சிரம‌ப்பட்டு வருவதாகவும், அவர்களை ரஷ்யா வழியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பினராயி விஜயன் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், போலந்து எல்லையில் உள்ள மாணவர்கள் கடும் குளிரால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர்களை எல்லை தாண்டி செல்ல உக்ரைன் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை எனவும் பினராயி விஜயன் தனது கடித‌த்தில் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்