உக்ரைனிலிருந்து நாடு திரும்பும் இந்திய மாணவர்கள்

உக்ரைனிலிருந்து நாடு திரும்பும் இந்திய மாணவர்கள்
x
உக்ரைன் நாட்டில் இருந்து ருமேனியா வழியாக 100 இந்திய மாணவர்கள், நாடு திரும்ப உள்ளனர். உக்ரைன் நாட்டின் வினித்சியா பகுதியில் உள்ள மருத்துவ பல்கலைகழகத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். தற்போது போர் நடைபெற்று வருவதால், இந்திய மாணவர்கள் நாடு திரும்ப தொடங்கியுள்ளனர். இதில்,100 பேர் கொண்டு ஒரு குழு, வினித்சியா பகுதியிலிருந்து இரண்டு பேருந்துகளில் ருமேனியா நோக்கிச் சென்று, அங்கிருந்து விமானம் மூலம் இந்தியா வருகை தர உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்