காசாவில் மீண்டும் தாக்குதல் நடத்திய இஸ்ரேல் ராணுவம்

பாலஸ்தீனத்திற்கு உட்பட்ட காசா பகுதியில் நேற்று இஸ்ரேல் மீண்டும் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.
காசாவில் மீண்டும் தாக்குதல் நடத்திய இஸ்ரேல் ராணுவம்
x
பாலஸ்தீனத்திற்கு உட்பட்ட காசா பகுதியில் நேற்று இஸ்ரேல் மீண்டும் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே கடந்த மாதம் 11 நாட்களுக்கும் மேலாக போர் நடைபெற்ற நிலையில், அதில் ஏராளமான குழந்தைகள் உட்பட 260 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இதனைத்தொடர்து கடந்த மே 21-ஆம் தேதி போர்நிறுத்தத்திற்கான உடன்பாடு ஏற்பட்டது. இந்நிலையில், போர் நிறுத்தம் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு காசா பகுதியில் இஸ்ரேல் நேற்று மீண்டும் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. பாலஸ்தீன பகுதியில் இருந்து தெற்கு இஸ்ரேல் பகுதிக்கு நேற்று முன்தினம் நெருப்பு பலூன் அனுப்பபட்டதாகவும், இதனால் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தீப்பற்றியதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதனையடுத்து காசாவில் இஸ்ரேல் ராணுவம் இரண்டுமுறை வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளதால், அங்கு மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்