இளைஞர் படுகொலை... தூத்துக்குடியை ஸ்தம்பிக்க வைத்த உறவினர்கள்

x

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இளைஞரை படுகொலை செய்த கும்பலை கைது செய்யக் கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கோவில்பட்டி அருகே செண்பகப்பேரி பகுதியை சேர்ந்த பாண்டி என்பவர் கொத்தனார் வேலை பார்த்து வந்த நிலையில், அதிகாலை கண்மாய்க்கு சென்ற போது மர்மகும்பல் அவரை வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியுள்ளது. நாலாட்டின்புதூர் போலீசார் பாண்டியின் உடலை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலைக்கு காதல் பிரச்சனையா அல்லது முன் விரோதம் காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வரும் சூழலில், கொலை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி பாண்டியின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.


Next Story

மேலும் செய்திகள்