ஏலகிரி மலையில் பேரதிர்ச்சி சம்பவம்... 5 வெளிமாநில பெண்களின் உல்லாச விளையாட்டு

x

ஏலகிரி மலையில் பேரதிர்ச்சி சம்பவம்... 5 வெளிமாநில பெண்களின் உல்லாச விளையாட்டு

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளமான ஏலகிரி மலையில் செயல்படும் தனியார் தங்கும் விடுதிகளில் பாலியல் தொழில் நடந்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து டிஎஸ்பி ஜெகநாதன் தலைமையிலான போலீசார், அங்கிருக்கும் பத்திற்கும் மேற்பட்ட விடுதிகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின் போது, பாலியல் தொழில் நடந்து வருவது உறுதியானது. இந்த சம்பவத்தில், சென்னை வளசரவாக்கம் பகுதியை சேர்ந்த இந்திர சேனன், நாகப்பட்டினம் பகுதியை சேர்ந்த சீனிவாசன், சௌந்தரராஜன் உள்ளிட்ட 9 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்த 5 பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்


Next Story

மேலும் செய்திகள்