இறந்தும் 7 பேருக்கு வாழ்க்கை கொடுத்த பெண்.. வெளியான சேதி | Thanthitv

x

கோயம்புத்தூர் மாவட்டம் ரத்தினபுரி பகுதியை சேர்ந்தவர் சாந்தி. 49 வயதான இவர் தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது கீழே விழுந்தார். இதில் அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதனையடுத்து குடும்பத்தினரின் ஒப்புதலுடன் அவரது உடல் உறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டது. அவரது இதயம், சிறுநீரகங்கள், கல்லீரல், கருவிழிகள், தோல், எலும்பு என மொத்தமாக 7 உடலுறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது. ஏழு பேருக்கு வாழ்வளித்த சாந்தியின் உடலானது அரசு மரியாதையுடன் அவர்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்