பேய் பிடித்ததாக கூறி அழைத்துவரப்பட்ட பெண் தற்கொலை

x

வேலூர் மாவட்டம் விருப்பாச்சிபுரத்தை சேர்ந்தவர் சத்யா. இவருக்கு பேய் பிடித்திருப்பதாக கூறி, திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த முத்து மாரியம்மன் கோயிலுக்கு அவரது கணவர் அழைத்துச் சென்றுள்ளார். இதில், இருவரையும் கோயில் வளாகத்தில் காத்திருக்குமாறு பூசாரி ஆறுமுகம் சொன்னதாக கூறப்படுகிறது. இதன்படி தம்பதி இருவரும் காத்திருந்த நிலையில், திடீரென அருகில் இருந்த எலுமிச்சை பழம் அறுக்கும் கத்தியை எடுத்து, தன்னைத்தானே கழுத்தறுத்து சத்யா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்