தமிழகத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. ஸ்பாட்டில் ஆய்வு செய்ய உடனே வந்த அமைச்சர் | Thanthitv | Rain

x

நீலகிரியில் மழை பாதிப்புகளை அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார். நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அவலாஞ்சி அருகேயுள்ள எமரால்டு பகுதியில் குடியிருப்புகள் அருகே நிலச்சரிவு ஏற்பட்டது. இந்நிலையில், அந்த பகுதிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு உள்ளிட்டோர் பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அமைச்சர் ராமச்சந்திரன், மீட்பு நடவடிக்கைகள் துரிதமாக நடைபெற்று வருவதாகக் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்