"பொது வாகன நிறுத்தங்களின் எண்ணிக்கையை 2 லட்சமா மாத்த போறோம்" - சென்னை மாநகராட்சி ஆணையர்

x

சென்னையில் மைக்ரோ வடிகால் அமைக்கும் பணிகளே நடைபெற்று வருவதாகவும், அவை 15 தேதிக்குள் முடிக்குள் முடிக்கப்படும் எனவும் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற மேட் ஆஃப் சென்னை வாக்கத்தான் நிகழ்ச்சியில் பங்கேற்ற ராதாகிருஷ்ணன், சென்னையில் ஏற்படும் வெள்ளத்திற்கு, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இருந்து வரும் உபரி நீரும் காரணம் என கூறினார். சாலைகள் நடப்பதற்கே என்பதால் நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் அகற்றப்படுவதாக குறிப்பிட்ட அவர், சென்னையில் உள்ள பொது வாகன நிறுத்தங்களின் எண்ணிக்கையை, 2 லட்சமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்