"பிறந்து 30 நாள் தான் ஆகுது".. தந்தை இழந்த ரெட்டை குழந்தைகள்.. பெயர் வைத்த 3ஆம் நாள்.. பெரும் சோகம்

x

சிவகாசி மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மாயதேவன் பட்டியில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 2 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குன்னூரை சேர்ந்த கார்த்தீஸ்வரன் மற்றும்

நாகபாளையத்தை சேர்ந்த புள்ள குட்டி ஆகிபோர் உயிரிழந்த நிலையில் 2 தொழிலாளர்கள் காயமடைந்தனர். அவர்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த 2 தொழிலாளர்களின் உடல்களும் உடற்கூறாய்வுக்காக

அங்கு கொண்டு வரப்பட்டன. பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மருத்துவமனையில் சோகத்துடன்

காத்திருந்தனர். உயிரிழந்த கார்த்தீஸ்வரனுக்கு

இரட்டையாக பிறந்த 2 பச்சிளம் ஆண் குழந்தைகள்

உள்ளதாகவும் அவரது குடும்பத்திற்கு அரசு உதவ

வேண்டும் என்றும் சகோதரி மாரியம்மாள் கண்ணீர்

மல்க வேண்டி கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்