ஆற்றுப்பாலத்தில் தலை.. ஊரையே நடுங்க வைத்த கொடூரம்.. சாலை மறியலில் குதித்த உறவினர்கள்

x

ராஜபாளையம் அருகே ஒருவர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில், சுமார் 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

ராஜபாளையம் அடுத்த கணபதி சுந்தரநாச்சியார் புரத்தை சேர்ந்தவர் பூவையா. 50 வயதான இவர், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள விவசாய நிலம் ஒன்றில், மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் போது கொலை செய்யப்பட்டார். அருகில் உள்ள முடங்கியார் ஆற்றுப் பாலத்தில், பூவையாவின் தலையை மட்டும் வைத்து விட்டு கொலையாளிகள் தப்பியோடியது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. விவசாய நிலத்தில் மாடுகளை மேய விட்டதால் ஏற்பட்ட தகராறில் பூவையா கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், நில உரிமையாளரின் மகன்கள் உட்பட மூவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், கொலையாளியாக கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த மேலும் ஒருவரை கைது செய்யக்கோரி, பூவையாவின் உறவினர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர், சேத்தூர் ஊரக காவல் நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்