திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார்... 4 பேருக்கு நேர்ந்த நடக்க கூடாத சோகம்

x

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே சாலையோர மரம் மீது கார் மோதியதில் ஆசிரியர் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழமுடிமன்னார் கோட்டையை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியரான பாலமுருகன், தனது நண்பர்களான மணி, சின்னத்துரை உள்ளிட்டோருடன் வெளியூர் சென்றுவிட்டு, காரில் சொந்த ஊர் திரும்பியுள்ளார். திருச்சுழி அருகே கல்லூரணியில் எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர மரத்தின் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆசிரியர் பாலமுருகன் உள்ளிட்ட 4 பேரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.‌ சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், தீயணைப்புத்துறை உதவியுடன் உடல்களை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்