4 பேர் உயிரை பறித்த பட்டாசு ஆலை விபத்து - நிதி வழங்கிய மாவட்ட ஆட்சியர்

x

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு, 3 லட்சம் ரூபாய்க்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் வழங்கினார். சாத்தூர் தாலுகா அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர், உயிரிழந்த தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு வழி செய்வதாக ஆட்சியர் உறுதி அளித்தார். இதே போன்று, பட்டாசு ஆலை உரிமையாளர்களின் தரப்பில், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையும், இறுதி சடங்கிற்காக 52 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக வழங்கப்பட்டது. இதையடுத்து, உயிரிழந்தவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்