டோல்கேட்டில் தடுத்து நிறுத்தப்பட்ட பேருந்து - பயணிகள் அவதி

x

விருதுநகர் மாவட்டம் சிவகாசியிலிருந்து மதுரைக்கு வந்து கொண்டிருந்த அரசு பேருந்து கப்பலூர் சுங்கச்சாவடி வந்த போது பேருந்தில் இருந்த பாஸ்டேக் ஸ்கேன் செய்யப்பட்ட நிலையில், அதில் பணம் இல்லை என்று வந்ததால் சுங்கச்சாவடி ஊழியர்கள் அரசு பேருந்து செல்ல அனுமதிக்க முடியாது என கூறி தடுத்து நிறுத்தினர். போக்குவரத்து பணிமனைக்கு ஓட்டுனர் அளித்த தகவலின் பேரில், பாஸ் டேக்கிற்கு ரீசார்ஜ் செய்யப்பட்டது. இதையடுத்து, 25 நிமிடம் கழித்து பேருந்து அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் பாதிக்கப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்