நடுரோட்டில் பிரிந்த தலைமை ஆசிரியர் உயிர்.. கதறி அழுத சக ஆசிரியர்கள் - கண்ணீர் வரவைக்கும் காட்சி

x

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே, கார் மோதிய விபத்தில் பள்ளித் தலைமை ஆசிரியர் உயிரிழந்தார்.

அருப்புக்கோட்டையை சேர்ந்த ரேவதி, காரியாபட்டி அருகே கல்குறிச்சி அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். அருப்புக்கோட்டையில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்தபோது, கல்குறிச்சியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது, நீலகிரியில் இருந்து தூத்துக்குடி நோக்கி அதிவேகமாக சென்ற கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலைக் கண்டு ஆசிரியர்கள் கதறி அழுதனர். உடலை கைப்பற்றிய போலீசார், விபத்து ஏற்படுத்திய நீலகிரியை சேர்ந்த கெவின் விஜய் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்