விபத்தில் பலியானவர்களை வேடிக்கை பார்த்தவர்களுக்கு நொடியில் நடந்த அதிர்ச்சி - 17 பேர் நிலை?

x

விருத்தாசலம் அடுத்த கீரம்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரதீப்ராஜ், மணிமாறன் ஆகியோர், மோட்டார் சைக்கிளில் விருத்தாச்சலம் நோக்கி சென்றனர். பரவலூர் - கோமங்கலம் இடையே வந்தபோது, எதிரே அதிவேகமாக வந்த லாரி மோதி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், போக்குவரத்தை சரி செய்தனர். இதனிடையே விபத்து குறித்து அறிந்து அருகில் உள்ள கிராம மக்கள் குவிந்தனர். அப்போது வேப்பூர் பகுதியில் இருந்து அதிவேகமாக வந்த கார் ஒன்று, விபத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் மீது மோதியது. இதில் சுமார் 17 பேர் காயமடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், கார் ஓட்டுநரை சரமாரியாக தாக்கினர்.


Next Story

மேலும் செய்திகள்