GH பில்டிங்கில் உடல் நொறுங்கி பலி - "ஐயோ.. ஐயோ.."நடுரோட்டில் அமர்ந்து நெஞ்சில் அடித்து கதறிய பெண்கள்

x

தேனி மாவட்டம், கம்பத்தில், புதிதாக கட்டப்பட்டு வரும் மருத்துமனை கட்டடத்தின் சிலாப் இடிந்து விழுந்து, தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

கம்பம் அரசு மருத்துவமனை வளாகத்தில், 3 மாடிகள் கொண்ட மகப்பேறு மருத்துவ பிரிவு கட்டப்பட்டு வருகிறது.

தற்போது, இந்த கட்டடத்தின் சிமெண்ட் பூச்சு பணிகள் நடைபெற்று வருகிறது. மதுரை ஊமச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த நம்பிராஜன் உள்ளிட்ட 4 தொழிலாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கட்டடத்தின் மேல் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சிலாப் ஒன்று திடீரென இடிந்து, தொழிலாளர்கள் மேல் விழுந்தது. இதில், இடிபாடுகளில் சிக்கி பலத்த காயமடைந்த நம்பிராஜன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த இருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். நம்பிராஜன் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்