தோள் மீது தாய்... கையில் பிறந்து 4 நாட்களே ஆன குழந்தை... நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வீடியோ

x

ஆந்திராவில் பிறந்த பச்சிளங் குழந்தையையும், தாயையும் ஆபத்தான முறையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்துகின்றன.

ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராம ராஜூ மாவட்டம் சுந்தரி கொண்டா கிராமத்திற்கு சரியான போக்குவரத்து வசதி கிடையாது. அந்த கிராமத்திற்கு செல்ல பயன்படுத்தப்படும் மண் சாலை வழியாக ஆறு ஒன்று ஓடும் நிலையில், மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது... இந்த சூழலில் அந்த கிராமத்தில் பிறந்து 4 நாள்களேயான குழந்தைக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

குழந்தையுடன் தாயையும் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஆனால் போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் அணையில் இருந்து தண்ணீர் வெளியேறும் மதகின் கீழ் இருக்கும் சுவரின் மீது மிகவும் ஆபத்தான நிலையில் குழந்தையை தூக்கி கொண்டு ஒருவர் முன்னே செல்ல குழந்தை பிறந்து 4 நாள்களேயான சூழலில் காயம் கூட ஆறாத அந்த தாயை மற்றொருவர் தோளில் அமர வைத்து ஆபத்தான முறையில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

இந்தக் காட்சிகள் காண்போரை பதைபதைக்க வைக்கின்றன.


Next Story

மேலும் செய்திகள்