சீறுநீரில் உணவு சமைத்த பணிப்பெண்... `கண்டதும்' முதலாளி குடும்பமே.. அதிர வைக்கும் கேவலம்

x

பணிப்பெண் ஒருவர் தன்னுடைய சிறுநீரை கொண்டு

ஒரு வீட்டில் உணவு சமைத்த நிகழ்வு உத்தர் பிரதேச

மாநிலம் காசியாபாத் பகுதியில் அரங்கேறியுள்ளது.

உத்தர் பிரதேச மாநிலம் காசியாபாத்தில், தொழிலதிபர்

ஒருவரின் வீட்டில் ரீனா என்ற பணிப்பெண் கடந்த

எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் சமையல் பொருட்கள் திருடு போவதாக

சந்தேகம் அடைந்த வீட்டின் உரிமையாளர், சமையல்

அறையில் பணிப்பெண்ணுக்கு தெரியாமல் சிசிடிவி

கேமரா ஒன்றை பொருத்தியுள்ளார். சிசிடிவி கேமராவை

ஆய்வு செய்த போது, வீட்டில் பணியாற்றும் பணிப்பெண்

பாத்திரம் ஒன்றில் தன்னுடைய சிறுநீரைப் பிடித்து, அந்த

சிறுநீரைக் கொண்டு சப்பாத்தி மாவு பிசைந்து, வீட்டில்

உள்ளவர்களுக்கு ரொட்டி தயாரித்து கொடுப்பது

தெரிய வந்துள்ளது. சிறுநீர் கலக்கப்பட்ட உணவை வீட்டில்

உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்ததன் காரணமாக

ஒவ்வாமை காரணமாக பல்வேறு உடல் நல கோளாறுகள்

ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அந்த

பணிப்பெண் கைது செய்யப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்