தமிழகம் முழுவதும் போலீஸ் உஷார்.. இரும்புக்கரத்திற்குள் வந்த கோவை, மதுரை

x

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போலீசார் சார்பில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.


கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக நடைபெறவுள்ள நிலையில், சுமார் 500 போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

மதுரை மாநகர் கோ புதூர் மூன்று மாவடி சந்திப்பில் இருந்து போலீசாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் பவானி பேருந்து நிலையத்தில் இருந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசாரின் கொடி அணிவகுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

இதேபோல், புஞ்சை புளியம்பட்டியில் காவல்துறை சார்பில், முக்கிய வீதிகள் வழியாக ஆயுதமேந்திய போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்