சாப்பாட்டில் ஊறுகாய் வைக்காததால் ரூ.35,000 அபராதம்... ஓட்டல் ஓனர் தலையில் இடியை இறக்கிய கோர்ட்

x

சாப்பாட்டில் ஊறுகாய் வைக்காததால் ரூ.35,000 அபராதம்... ஓட்டல் ஓனர் தலையில் இடியை இறக்கிய கோர்ட்

விழுப்புரத்தை சேர்ந்த ஆரோக்கியசாமி என்பவர் கடந்த 2022-ஆம் ஆண்டில், முதியோருக்கு அன்னதானம் வழங்க ஓட்டலில் உணவு ஆர்டர் செய்துள்ளார். பார்சலை பிரித்து பார்த்தபோது ஊறுகாய் இல்லாததது தெரியவந்த நிலையில், ஓட்டல் உரிமையாளரிடம் ஊறுகாய்குரிய 25 ரூபாயை ஆரோக்கியசாமி கேட்டுள்ளார். அதற்கு ஓட்டல் உரிமையாளர் தர மறுத்த நிலையில், நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் ஆரோக்கியசாமி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில், ஓட்டல் உரிமையாளருக்கு 35 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, விழுப்புரம் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்