மகளை காதலித்த நபரை பிளான் போட்டு கடத்திய குடும்பம் - சென்னை முழுவதும் பறந்த மெசேஜ்

x

விழுப்புரம் வண்டி மேடு பகுதியைச் சேர்ந்த முகமது அலி, கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் கடந்த ஓட்டுனராக பணியாற்றி வந்தார். அவர் தனது நிறுவன ஊழியருடன் பைக்கில் டீ கடைக்கு சென்றுள்ளார். அப்போது, பைக்கை வழிமறித்த 4 பேர், முகமது அலியை மட்டும் காரில் கடத்திச் சென்றனர். இது குறித்து அவரது நண்பர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். விசாரணையில் இறங்கிய தரமணி போலீஸ், கார் பதிவு எண்ணை, சென்னை, தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்ட போலீசாருக்கு கொடுத்து, வாலிபர் காரில் கடத்தப்பட்டது குறித்து தகவல் தெரிவித்தனர். இதற்கிடையில் வாலிபரை கடத்திய கார் விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர் சென்றபோது போலீசார் காரை மடக்கி அந்த இளைஞரை மீட்டனர். இதையடுத்து அந்த இளைஞரையும், அவரை கடத்தியவர்களையும், தரமணி காவல்நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது, காதல் விவகாரத்தில் இளைஞர் முகமது அலியை காதலியின் தந்தை, சகோதரர் மற்றும் உறவினர்கள் கடத்தியது தெரியவவந்தது.


Next Story

மேலும் செய்திகள்