எமனாக ராங் ரூட்டில் வந்த லாரி.. டயரில் சிக்கிய கணவன், மகள்.. பெண்ணின் கண்முன்னே பலியான உயிர்கள்..

x

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பெண்ணின் கண் முன்னேயே கணவன் மற்றும் பத்து மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேல்சிவிரி கிராமத்தை சேர்ந்த தம்பதி முத்துக்குமார் - தீபலட்சுமி. இவர்களுக்கு பத்து மாத பெண் குழந்தை உள்ளது. மூவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் வெள்ளிமேடு பேட்டை பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது எதிர்திசையில் வந்த லாரி ஒன்று இருசக்கர வாகனத்தின்மீது மோதிவிட்டு சிறிது தூரம் நிற்காமல் சென்றுள்ளது. இதில் முத்துக்குமார் மற்றும் பத்து மாத குழந்தை தனுஸ்ரீ, லாரியின் டயரில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தீப லெட்சுமிக்கு வலது கையில் முறிவு ஏற்பட்டது. பெண்ணின் கண்முன்னேயே அவரது கணவர் மற்றும் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்