மாணவன் காதில் அடித்த ஆசிரியர்..எல்லாமே போச்சே.. கதறும் தாய்- நெஞ்சை கலங்கடிக்கும் காட்சிகள்

x

விழுப்புரம் மாவட்டம், ரெட்டணையில் ஆசிரியர் அடித்து மாணவரின் செவித்திறன் பாதிக்கப்பட்டதால் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மாணவருடன் சென்று தாயார் புகார் அளித்தார். ரெட்டணையில் உள்ள தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வரும் சதீஷ்குமாரை வகுப்பு ஆசிரியர் பெருமாள், ஆடை சம்பந்தமாக கேள்வி எழுப்பி, காதில் அடித்துள்ளார். இதனால் மாணவனுக்கு செவித்திறன் பாதிக்கப்பட்டதாக கூறி, மாணவரின் தாயார் சங்கீதா, பெரிய தச்சூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் ஆசிரியர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, சார் ஆட்சியர் அலுவலகத்தில் மகனுடன் வந்து புகார் மனு அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்