டீச்சரிடம் கம்ப்ளைன்ட் செய்த மாணவி - வீடு தேடி வந்து பெற்றோரை குலைநடுங்கவிட்ட 4 சிறுவர்கள்

x

விழுப்புரத்தில் பெட்ரோல் குண்டு வீசிய 4 சிறுவர்கள் சிறார் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனர்.ஜி.ஆர்.பி. தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளி தம்பதி பிரதாப் - ராசாத்தி. இவர்களது மகள் படிக்கும் பள்ளியில் சிறுவன் ஒருவன் திருட்டு செயலில் ஈடுபட்டுள்ளார். இதனை பிரதாப்பின் மகள் ஆசியரிடம் தெரிவித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அந்த சிறுவன், நள்ளிரவில் தனது நண்பர்கள் மூன்று பேருடன் சேர்ந்து பிரதாப்பின் வீட்டு வாசலில் பெட்ரோல் குண்டு வீசியுள்ளார். மேலும், சத்தம் கேட்டு வெளியே வந்த பிரதாப் குடும்பத்தினருக்கு, சிறுவர்கள் கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இதுகுறித்த புகாரில், நான்கு சிறுவர்களும் கைது செய்யப்பட்டு, சிறுவர் சீர் திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்