"உண்மை சொன்னதால் பழிவாங்கல்" போராட்டத்தில் குதித்த செவிலியர்கள்.. நோயாளிகள் அவதி

x

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால், நோயாளிகள் அவதியடைந்தனர். மருத்துவர்கள் பற்றாக்குறை மற்றும் வெளிசந்தையில் மருந்துகள் விற்பனை செய்வது குறித்து புகார் அளித்த செவிலியர்கள் மீது மருத்துவமனை நிர்வாகம் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது. செவிலியர்கள் போராட்டம் காரணமாக சுமார் 2 மணி நேரமாக சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் அவதியடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்