தமிழகமே உற்று நோக்கும் நேரம்..வெளியாகும் மக்கள் தீர்ப்பு | vikravandi by election

x

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்கவுள்ளதையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் 276 வாக்குச் சாவடிகளில் நடைபெற்றது. தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா, பா.ம.க. வேட்பாளர் அன்புமணி, நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா உள்பட 29 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 82.47 சதவிகித வாக்குகள் பதிவான நிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நாளை காலை 8 மணிக்கு இங்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கவுள்ளது. 20 சுற்றுகளாக நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையில் முதலாவதாக தபால் வாக்குகள் எண்ணப்படவுள்ளன. இதையொட்டி வாக்கு எண்ணும் மையத்தில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் முன்னெடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்