இரவு வரை நடந்த வாக்கு பதிவு.. - விடிய விடிய கொண்டு செல்லப்பட்ட EVM மெஷின்கள்..

x

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு வரப்பட்டன. நேற்று ஒரு சில வாக்கு சாவடியில் மட்டும் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நீடித்த நிலையில், மொத்தம் 276 வாக்கு சாவடி மையங்களில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் விடிய விடிய பனையபுரம் அரசு பள்ளிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன. நள்ளிரவில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டுவரப்படும் பணியினை ஆய்வு மேற்கொண்டார். இன்று காலை 10:30 மணிக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள் முகவர்கள் முன்னிலையில், எந்திரங்கள் உள்ள அறைக்கு சீல் வைக்கப்படும் நிலையில், வருகிற 13ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்