ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை - அரசு, தனியார் நிறுவனங்கள் அனைத்திற்கும் பொருந்தும்

x

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறும் நாளான வரும் 10ம் தேதி, தொகுதி முழுவதும் பொது விடுமுறை தினம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பிறப்பித்துள்ள உத்தரவில், அரசு அலுவலகங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்திற்கும் இந்த விடுமுறை பொருந்தும் என கூறியுள்ளார். விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்து, வெளி மாவட்டங்களில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கும் இந்த விடுமுறை பொருந்தும் என தெரிவித்துள்ளார். அன்றைய நாளில் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட வேண்டும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்