விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் - வெளியானது முக்கிய அறிவிப்பு

x

விக்கிரவாண்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த புகழேந்தி, உடல்நலக்குறைவால் கடந்த ஏப்ரல் மாதம் உயிரிழந்தார். இதனையடுத்து விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில், விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜூலை 10ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்பு மனு தாக்கல் ஜூன் 14ம் தேதி தொடங்கும் எனவும், வேட்புமனு தாக்கல் செய்ய ஜூன் 21ம் தேதி கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 24ம் தேதி நடைபெறும் என்றும், ஜூன் 26ம் தேதி வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 10ம் தேதி வாக்குப்பதிவும், ஜூலை 13ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்