இன்னும் விஜயகாந்த்தை தேடி வீட்டு வாசலில் கூடும் உயிர்கள்

x

மறைந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தை தேடி தினந்தோறும் இல்லத்திற்கு வரும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களால் பிரச்சினை ஏற்படுவதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தேமுதிக விருகம்பாக்கம் செயலாளர் லட்சுமணன், விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் இந்த புகார் மனுவை அளித்துள்ளார். அதில், சென்னை சாலிகிராமத்தில் அமைந்துள்ள விஜயகாந்த் வீட்டிற்கு, தினந்தோறும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் வருவதாகவும் விஜயகாந்த் எங்கே எனக் கேட்டு அவருடைய வீட்டு வாசலில் பிரச்சனை செய்வதாகவும் கூறப்பட்டுள்ளது. சில நேரங்களில் விஜயகாந்த் வீட்டு வாசலிலேயே மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் உறங்கிவிடுவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலிகிராமம் இல்லத்தில், அவரது மனைவி பிரேமலதாவும், இரு மகன்களும் வசித்து வருவதால் பாதுகாப்பு வழங்க வேண்டும் என மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்