மாநாட்டுக்கு அழைத்த விஜய்..? - கண்டிஷனாக சொன்ன சீமான்

x

மாநாட்டுக்கான நிபந்தனைகள் எவ்வாறு கடைப்பிடிக்கப்படுகிறது என்று தமிழக வெற்றிக் கழகத்தினருடன் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். பின்னர் டி.ஐ.ஜி. அலுவலகம் சென்ற புஸ்சி ஆனந்திடம், மாநாட்டிற்கு எவ்வளவு பேர் வருகை தருவார்கள், வாகனங்கள் நிறுத்துமிடம், முக்கிய பிரமுகர்கள் மாநாட்டு மேடைக்கு வரும் வழி, விஜய் வருகை குறித்த ரூட் மேப், ஏற்பாடு என்னென்ன செய்யப்படுகிறது என்ற விவரங்களை டி.ஐ.ஜி. திஷாமித்தல் கேட்டறிந்தார். மேலும், மாநாட்டு பணிகள் எப்போது நிறைவடையும் என்றும், நிறைவடைந்த பணிகளை காவல்துறையினர் எப்போது ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் எனவும் கேட்டறிந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்