யூடியூப் சேனலில் வெளியான வீடியோ - அதிர்ச்சியில் நடிகர் நகுல்

x

#youtube | #nakul

யூடியூப் சேனலில் வெளியான வீடியோ - அதிர்ச்சியில் நடிகர் நகுல்

தன்னை பற்றியும் தன்னுடன் பணியாற்றிய நபர்கள் பற்றியும் அவதூறாக யூடியூப் சேனலில் பேசிய நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் நகுல் புகார் அளித்தார்.

நடிகர் நகுல் சமீபத்தில் வாஸ்கோடகாமா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அப்போது அவருக்கு அலுவலக உதவியாளராக சந்துரு என்பவர் பணியாற்றியுள்ளார். இவர் வாஸ்கோடகாமா படக்குழுவினர்களான நடிகர் நகுல், இயக்குனர் ஆர்ஜிகே, நடிகைகள் அர்த்தனா மற்றும் சுனைனா பற்றி அநாகரிகமாகவும், தவறாகவும் யூடியூப்பில் பேசி பேட்டி அளித்துள்ளார். எந்தவித அடிப்படை ஆதாரங்களும் இன்றி பேசிய அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் அந்த யூடியூப் வீடியோவை நீக்ககோரியும் நடிகர் நகுல் புகார் அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்