"எந்தவொரு தந்தைக்கும் வரக்கூடாத துயரம்.." "வெற்றி துரைசாமி மறைவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்"

x

சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி மகன் வெற்றி துரைசாமி மறைவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

இமாச்சல பிரதேசத்தில் நடந்த கார் விபத்தில் வெற்றி துரைசாமி உயிரிழந்து, அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது குறித்த செய்தியைப் பார்த்து அதிர்ச்சியும் மிகுந்த வேதனையும் அடைந்ததாக கூறியுள்ளார். எந்தவொரு தந்தையும் எதிர்கொள்ளக் கூடாத, எதிர்கொள்ள இயலாத துயரம் இது என்றும், உயிருக்கு உயிரான மகனை இழந்து தவிக்கும் சைதை துரைசாமிக்கு, இத்துயர்மிகு நேரத்தில் எனது இதயபூர்வமான ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும், தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்