``மிரட்டி கையெழுத்து வாங்குறாங்க; கூலி, PFல மோசடி''... கொந்தளிக்கும் தூய்மை பணியாளர்கள்...

x

வேலூரில் ஊதிய உயர்வு கோரி தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 2023 - 24-க்கான ஊதிய உயர்வு வழங்காததாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், பி.எஃப், ஊதியம் உள்ளிட்டவற்றில் முறைகேடு நடைபெறுவதாக குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், போராட்டத்தில் ஈடுபடுவோருக்கு மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாவிட்டால், போராட்டம் தொடரும் எனவும் பணியாளர்கள் எச்சரித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்