பிரபல ரவுடி அடுத்த என்கவுன்ட்டரா? சிறை சந்திப்புக்கு பின் கசியும் தகவல்

x

வேலூர் சிறையில் உள்ள பிரபல ரவுடி அரும்பாக்கம் ராதாவை என்கவுண்டர் செய்துவிடுவோம் என்று ஜெயிலர் மிரட்டல் விடுப்பதாக, ராதாவின் மனைவி குற்றம் சாட்டியுள்ளார். ஆயுள் கைதியான ராதாவை, அவரது மனைவி தீபிகா சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிறையில் தனது கணவரை தனி அறையில் வைத்து கொடுமைப்படுத்துவதாக குற்றம் சாட்டினார். ஜெயிலர் அருண்குமரன் என்பவர் பணம் கேட்பதோடு, போலீசாரிடம் கூறி என்கவுண்டர் செய்து விடுவோம் என்று மிரட்டுவதாகவும், என் கணவருக்கு என்ன நடந்தாலும் அதற்கு முழு காரணம் ஜெயிலர் தான் என்றும் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்