நள்ளிரவில் கோழிகளை விழுங்கிய மலைப்பாம்பு - திக் திக் காட்சிகள்

x

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே சுரேஷ் என்பவர் சொந்தமாக கோழி பண்ணை வைத்து நாட்டு கோழிகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் வழக்கம் போல் சுரேஷ் கோழிகளுக்கு உணவு அளித்துவிட்டு இரவு தூங்கச் சென்றுள்ளார். இந்நிலையில் சுமார் 15 அடி நீளமுடைய மலைப்பாம்பு கோழி பண்ணைக்குள் புகுந்து கோழிகளை விழுங்கியுள்ளது. இதனையடுத்து மறுநாள் காலையில் சுரேஷ் கோழிப்பண்ணைக்கு வந்த பார்த்தபோது மலைப்பாம்பு ஒன்று கோழிகளை விழுங்கிய நிலையில் படுத்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மலைப்பாம்பு அடர்ந்த காப்புக்காட்டில் பத்திரமாக விடபட்டது.


Next Story

மேலும் செய்திகள்